செம்மொழியே
செம்மொழியே - உன்
செவ்விய செழுமையில்
திளைத்து வந்தேன்
மொழிநடையில்
உன் இளநடையில்
உன்பின் நடைபோட
நானும் வந்தேன்
உயிர்மெய் கலந்து
உன்னுள் இணைந்து
வாழ்வின் சரிதம்
எழுத வந்தேன்
வெறுந்தாள் நானும்
உன்தாழ் இணைந்து
செய்தித் தாளாக
பரவ வந்தேன்
ஆவணம் போலே
ஆண்டுருண்டலும்
உன்பெயர்ச் சொல்லில்
நிலைக்க வந்தேன்
Monday, September 27, 2010
Tuesday, April 27, 2010
வேசி சுகம்
சாக்கடை ஓடும்
கூவக் கரையில்
வீசும் காற்றும்
இதமானதே!
அதனோடு வாசம்
வருகையில்
மனம் நெருடும்
விதமானதே!
Friday, March 19, 2010
குடல் புற்று
அழுகிறது வாஷ் பேசின்
அதன் குடல் அடைக்கிறதாம்
அதற்கு வேண்டாமாம்
புகையிலையும்
பாக்கும், பான்பராக்கும்
அதன் குடல் அடைக்கிறதாம்
அதற்கு வேண்டாமாம்
புகையிலையும்
பாக்கும், பான்பராக்கும்
Tuesday, March 16, 2010
வயது
பக்கத்து விட்டு பெண்ணானவள்
பழகுவதற்கு பூ மொட்டானவள்
பள்ளி காலம் தொட்டே
பழக்கம் எனக்கானவள்
இல்லம் மாறி போனாள் அவள்
இன்றும் இன்முகத்தோடு பேசுபவள்
பதின்ம வயதுகளில்
போடா வாடா என்பாள்
இருபதில் இருக்கையிலே
"ஹாய்" என்று சொல்லிச் சென்றாள்
தோழமையால் என்றிருந்தேன்
முப்பதில் முகம் பார்த்தால்
'அண்ணா' என்றழைப்பாள்
அன்பினால் என்றிருந்தேன்
நாற்பதில் நானிருக்க
'அங்கிள்' என்றாளே
அதிர்ச்சியில் வாயடைத்தேன்
ஐம்பதில் என்ன சொல்வாள்
'ஐயா' என்றழைப்பாளோ
நான் அவளை
பெயர் சொல்லி அழைத்து வந்தேன்
உறவு வைத்து அழைத்ததில்லை
ஆண்டாண்டு கடந்தாலும்
அவள் வயது
அப்படியே உள்ளதுவாம்
ஆணான எனக்கு மட்டும்
வயதேருவதெப்படியாம்?
பழகுவதற்கு பூ மொட்டானவள்
பள்ளி காலம் தொட்டே
பழக்கம் எனக்கானவள்
இல்லம் மாறி போனாள் அவள்
இன்றும் இன்முகத்தோடு பேசுபவள்
பதின்ம வயதுகளில்
போடா வாடா என்பாள்
இருபதில் இருக்கையிலே
"ஹாய்" என்று சொல்லிச் சென்றாள்
தோழமையால் என்றிருந்தேன்
முப்பதில் முகம் பார்த்தால்
'அண்ணா' என்றழைப்பாள்
அன்பினால் என்றிருந்தேன்
நாற்பதில் நானிருக்க
'அங்கிள்' என்றாளே
அதிர்ச்சியில் வாயடைத்தேன்
ஐம்பதில் என்ன சொல்வாள்
'ஐயா' என்றழைப்பாளோ
நான் அவளை
பெயர் சொல்லி அழைத்து வந்தேன்
உறவு வைத்து அழைத்ததில்லை
ஆண்டாண்டு கடந்தாலும்
அவள் வயது
அப்படியே உள்ளதுவாம்
ஆணான எனக்கு மட்டும்
வயதேருவதெப்படியாம்?
Friday, March 12, 2010
போர்க்களம்
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
பார்க்கலாம் என்றெண்ணங்கள்
வாழ்வோரைப் பார்க்கவே
பறந்து தான் சென்றன
வெடிச்சிரிப்பு கேட்டது
விழி வெளிவர பார்த்தது
வெற்றிக்கொடி நாட்டிய
சிங்கங்கள் சிரித்தது
வெறுத்து ஒதுங்கியே
வேங்கைகள் எங்கோ பதுங்கின
மீள் குடியேற்றிட
வெளியார் வேண்டிட
அடிக்கல் நாட்டிட
மீண்டும் குழி தோண்டிட
செம்புலம் பெயர்ந்த மண்ணில்
மறைந்த மறவரெல்லாம்
சகதியில் சதையாய் தோன்றிட
சங்கறுத்த நிலையாகிட
சாந்தியை தேடினேன் ஓடினேன்
தாகம் தணித்திட
ஆழ குழிதோண்டி
ஆழ் குழாய் போட்டதில்
அருவியாய் பாய்ந்தது
அத்தனையும் ரத்தம்
அப்படியே நின்றது - என்
நாடிச் சத்தம்
புத்தனை பூஜித்தவரின்
புத்தியும் புரியவில்லை
காந்தியை கற்பித்தவரோ
கற்றபடி நிற்கவில்லை
கொல்லும்படி ஆணை தந்த
கொற்றவனோ அங்கே
குலவி குற்றம் செய்தார்
மற்றவரோ இங்கே
சூழ் நிலையே சூனியமாய்
சுழலக் கண்டேன்
சுற்றி நின்ற சுற்றமெலாம்
சுழன்று விழவும் கண்டேன்
சட்டனவே விழியை திறந்து கொண்டேன்
கனவினின்று நானும் கண் விழித்தேன்
கேட்டதே கனவிலே கோர்வையாக
போர்க்கள காட்சியாக இங்கே
நிஜத்திலே நிற்குமா
எந்தன் ஆவி அங்கே
வாழ்ந்துதான் பார்க்கணும்
பார்க்கலாம் என்றெண்ணங்கள்
வாழ்வோரைப் பார்க்கவே
பறந்து தான் சென்றன
வெடிச்சிரிப்பு கேட்டது
விழி வெளிவர பார்த்தது
வெற்றிக்கொடி நாட்டிய
சிங்கங்கள் சிரித்தது
வெறுத்து ஒதுங்கியே
வேங்கைகள் எங்கோ பதுங்கின
மீள் குடியேற்றிட
வெளியார் வேண்டிட
அடிக்கல் நாட்டிட
மீண்டும் குழி தோண்டிட
செம்புலம் பெயர்ந்த மண்ணில்
மறைந்த மறவரெல்லாம்
சகதியில் சதையாய் தோன்றிட
சங்கறுத்த நிலையாகிட
சாந்தியை தேடினேன் ஓடினேன்
தாகம் தணித்திட
ஆழ குழிதோண்டி
ஆழ் குழாய் போட்டதில்
அருவியாய் பாய்ந்தது
அத்தனையும் ரத்தம்
அப்படியே நின்றது - என்
நாடிச் சத்தம்
புத்தனை பூஜித்தவரின்
புத்தியும் புரியவில்லை
காந்தியை கற்பித்தவரோ
கற்றபடி நிற்கவில்லை
கொல்லும்படி ஆணை தந்த
கொற்றவனோ அங்கே
குலவி குற்றம் செய்தார்
மற்றவரோ இங்கே
சூழ் நிலையே சூனியமாய்
சுழலக் கண்டேன்
சுற்றி நின்ற சுற்றமெலாம்
சுழன்று விழவும் கண்டேன்
சட்டனவே விழியை திறந்து கொண்டேன்
கனவினின்று நானும் கண் விழித்தேன்
கேட்டதே கனவிலே கோர்வையாக
போர்க்கள காட்சியாக இங்கே
நிஜத்திலே நிற்குமா
எந்தன் ஆவி அங்கே
சொல்லடி
சொல்லாடி சொன்னடி சொல்லடி
சொல்லிலடித்தது ஏனடி
என்னையே எண்ணியே சொன்னியா
சொன்னதெல்லாம் உண்மையா
உனக்குள் நான் இனி இல்லையா
உறவை முறிப்பது தன்மையா
வெறுந்தாளாய் பறந்த என்னில்
கவிதை உன்னை எழுதிவைத்தேன்
அன்றோ ரசித்து படித்தவள் நீ
இன்றோ கிழித்து எறிந்தவள் நீ
கவியரங்கே கருத்தரங்கில்
கண்ட குறை என்ன கண்ணே
செந்தமிழே சங்கமத்தில்
சந்திப்பிழை கண்டாயோ
சொந்தமில்லை என்றாயோ
குரல் மொழியில் கீரனாகி
பொருட்குறை கண்டு நீயும்
கருவிழியில் கண்ணகியாய்
பந்தமில்லை என்று சொல்லி
பாண்டிசபையாக்கிச் சென்றாய்
பொறுமை உனக்கில்லையடி
வெறுமை எனை சேர்ந்ததடி
வெந்து நொந்தேன் - சொன்ன நொடி
துர்வாசர் வார்த்தையாலே
துஷ்யந்தனாகி நீயும்
துக்கத்தை தூக்கி தந்தே
சகுந்தலையாய் சாய்த்ததேனோ
மறக்கடி என்ற-அடி சொன்ன நொடி
மனம் கல்லடி-கண்ணாடி ஆனதடி
என் தசையடி
கசையடி தாங்குமடி
உன் வசையடி
விசையடி மாய்க்குதடி
சொல்லிலடித்தது ஏனடி
என்னையே எண்ணியே சொன்னியா
சொன்னதெல்லாம் உண்மையா
உனக்குள் நான் இனி இல்லையா
உறவை முறிப்பது தன்மையா
வெறுந்தாளாய் பறந்த என்னில்
கவிதை உன்னை எழுதிவைத்தேன்
அன்றோ ரசித்து படித்தவள் நீ
இன்றோ கிழித்து எறிந்தவள் நீ
கவியரங்கே கருத்தரங்கில்
கண்ட குறை என்ன கண்ணே
செந்தமிழே சங்கமத்தில்
சந்திப்பிழை கண்டாயோ
சொந்தமில்லை என்றாயோ
குரல் மொழியில் கீரனாகி
பொருட்குறை கண்டு நீயும்
கருவிழியில் கண்ணகியாய்
பந்தமில்லை என்று சொல்லி
பாண்டிசபையாக்கிச் சென்றாய்
பொறுமை உனக்கில்லையடி
வெறுமை எனை சேர்ந்ததடி
வெந்து நொந்தேன் - சொன்ன நொடி
துர்வாசர் வார்த்தையாலே
துஷ்யந்தனாகி நீயும்
துக்கத்தை தூக்கி தந்தே
சகுந்தலையாய் சாய்த்ததேனோ
மறக்கடி என்ற-அடி சொன்ன நொடி
மனம் கல்லடி-கண்ணாடி ஆனதடி
என் தசையடி
கசையடி தாங்குமடி
உன் வசையடி
விசையடி மாய்க்குதடி
விரிசல்
உயிரே உடலை பிரிந்தாலும்
உறவு நிலைதானே
உறவில் விரிசல் விழுந்தாலும்
உணர்வு எழும்தானே
கண்ணை இமை குத்தியதே
காயம்பட்டு இதயத்திலே
கொதிக்குது ரத்தம்
காதலனே கயவனாகும்
கோபத்தின் கோலமென்ன
மோகத்தில் விளைந்ததுவோ
மோசத்தில் முடிவதென்ன
பாசத்தை பொசுக்கிவிட்டு
நேசத்தை நெருப்பிலிட்டாய்
நொறுங்கியதுள்ளம்
மழைநீராய் இனித்தவளே
கடல் நீராய் கரித்ததென்ன
மரிக்கொழுந்தாய் மணத்தவளே
மந்திரமாய் ரௌத்திரத்தில்
தரித்திரமாய் காதலையே
சரித்ததென்ன சரித்திரத்தை
சீர்கெடவா சித்தரித்தோம் - காதல்
சித்திரத்தை கருத்தரித்தோம்
கத்தரித்தாய் கடிந்தே இன்று - மனம்
கதற கருவருத்தாய்
நச்சரித்தாய் காதல் தந்தே
நித்திரையில் நித்தம் வந்தே
எச்சரித்த எதிர்ப்பையெல்லாம்
எருவாக்கி வரிந்து நின்றேன்
மலரே முன்னம் சொன்னதென்ன
முள்ளாய் சொல்லில் தைத்ததென்ன
மனனத்தில் ஒப்பித்தாயோ - என்
மரணத்தில் சிந்திப்பாயோ
பார்த்தவளை பெற்று - அவளில்
பெற்றவளை பார்த்திருந்தேன்
மாற்றுடையாய் கழற்றியென்னை
மறந்து மறுத்துச் சென்றதென்ன
மனதை அரிந்து சென்றவளோ
எனதை எடுத்து சென்றுவிட்டாள்
திருப்பித்தர வருவாளோ - நான்
திருத்தம் தர தெளிவாளோ
பூவை பாதம் பார்ப்பதற்கே
பாதையில் படுத்தது பார்வை - வரும்
வழியில் வீழ்ந்தன விழிகள் - மறு
மொழிக்கு ஏங்கின செவிகள் - உன்
மொழிக்கு ஏங்கின செவிகள்
உறவு நிலைதானே
உறவில் விரிசல் விழுந்தாலும்
உணர்வு எழும்தானே
கண்ணை இமை குத்தியதே
காயம்பட்டு இதயத்திலே
கொதிக்குது ரத்தம்
காதலனே கயவனாகும்
கோபத்தின் கோலமென்ன
மோகத்தில் விளைந்ததுவோ
மோசத்தில் முடிவதென்ன
பாசத்தை பொசுக்கிவிட்டு
நேசத்தை நெருப்பிலிட்டாய்
நொறுங்கியதுள்ளம்
மழைநீராய் இனித்தவளே
கடல் நீராய் கரித்ததென்ன
மரிக்கொழுந்தாய் மணத்தவளே
மந்திரமாய் ரௌத்திரத்தில்
தரித்திரமாய் காதலையே
சரித்ததென்ன சரித்திரத்தை
சீர்கெடவா சித்தரித்தோம் - காதல்
சித்திரத்தை கருத்தரித்தோம்
கத்தரித்தாய் கடிந்தே இன்று - மனம்
கதற கருவருத்தாய்
நச்சரித்தாய் காதல் தந்தே
நித்திரையில் நித்தம் வந்தே
எச்சரித்த எதிர்ப்பையெல்லாம்
எருவாக்கி வரிந்து நின்றேன்
மலரே முன்னம் சொன்னதென்ன
முள்ளாய் சொல்லில் தைத்ததென்ன
மனனத்தில் ஒப்பித்தாயோ - என்
மரணத்தில் சிந்திப்பாயோ
பார்த்தவளை பெற்று - அவளில்
பெற்றவளை பார்த்திருந்தேன்
மாற்றுடையாய் கழற்றியென்னை
மறந்து மறுத்துச் சென்றதென்ன
மனதை அரிந்து சென்றவளோ
எனதை எடுத்து சென்றுவிட்டாள்
திருப்பித்தர வருவாளோ - நான்
திருத்தம் தர தெளிவாளோ
பூவை பாதம் பார்ப்பதற்கே
பாதையில் படுத்தது பார்வை - வரும்
வழியில் வீழ்ந்தன விழிகள் - மறு
மொழிக்கு ஏங்கின செவிகள் - உன்
மொழிக்கு ஏங்கின செவிகள்
Subscribe to:
Posts (Atom)