Wednesday, January 13, 2010

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்
பொங்கிய ஏக்கங்கள்
எண்ணிய எண்ணங்கள்
தீர்க்குமோ இத்தைத்திங்கள்


நிகழ்ந்த நனவுகள்
கவிழ்ந்த கனவுகள்
மாறும் காட்சிகள்
ஆக்குமோ இத்தைத்திங்கள்


பணம் பறிக்கும் பள்ளிகள்
பணியில்லா திண்டாட்டங்கள்
ஒழிக்குமோ இத்தைத்திங்கள்


நயவஞ்சகங்கள்
நம்பகமில்லா தன்மைகள்
நம்பிக்கை மோசடிகள்
நசுக்குமோ இத்தைத்திங்கள்


அளவிலா ஆடம்பரங்கள்
பதறவைக்கும் பஞ்சங்கள்
சமநிலையாக்குமோ இத்தைத்திங்கள்


தர்க்கத்தில் மத இனங்கள்
தலையெடுக்கும் போர்க்குணங்கள்
தணிந்து மகிழும் சமத்துவங்கள்
துளிர்க்குமோ இத்தைத்திங்கள்


ஓங்கிய தொல்லைகள்
ஓயாத அலைகள்
ஓய்வெடுக்குமோ இத்தைத்திங்கள்


சிற்சில ஏற்றங்கள்
சிதறடித்த ஏமாற்றங்கள்
சென்றன அந்நாட்கள்


“தை பிறந்தால் வழி பிறக்கும்
தந்தைமார் சொன்னார்கள்
எந்த தை? எழுதி தாருங்கள் ”
என்ற வைரமுத்து வாசகங்கள்
வலுவிழக்குமோ இத்தைத்திங்கள்


இனி வரும் நாட்கள்
சிந்தித்து செயல்படுங்கள்
சிறந்த வழி தேர்ந்தெடுங்கள்
சிக்கலை தவிர்த்திடுங்கள்
நல்லதை நினைத்திடுங்கள்
அல்லதை தள்ளிடுங்கள்
ஆசையை துரத்திடுங்கள்
அளவோடு பெற்றிடுங்கள்
பண்பினை வளர்த்திடுங்கள்
பாசத்தை பகிர்ந்திடுங்கள்
நேசத்தோடு இருந்திடுங்கள்
நட்போடு பழகிடுங்கள்
உழவு தொழில் போற்றிடுங்கள்
உழைப்போரை உயர்த்திடுங்கள்
உரிமையை தந்திடுங்கள்
நல்லோரின் பழமொழிகள்
நலமாக்கும் நல்வழிகள்
கடைபிடிப்போம் நம்வாழ்வில்
தைத்திங்கள் முதல் நாள்
தமிழர்தம் திருநாள்
இனி வரும் நாளெல்லாம்
வள நாளாய் அமைந்திடவே
தமிழ்த்தாயை வணங்கிடுவோம்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


****** பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூடிய உரையாடல் போட்டிக்கவிதை ******

4 comments:

  1. சக்தி, என்ன சொல்ல வரிங்க

    ReplyDelete
  2. அற்புதமான வரிகள்
    யோசிக்க வேண்டிய நெறிகள்

    ReplyDelete