பக்கத்து விட்டு பெண்ணானவள்
பழகுவதற்கு பூ மொட்டானவள்
பள்ளி காலம் தொட்டே
பழக்கம் எனக்கானவள்
இல்லம் மாறி போனாள் அவள்
இன்றும் இன்முகத்தோடு பேசுபவள்
பதின்ம வயதுகளில்
போடா வாடா என்பாள்
இருபதில் இருக்கையிலே
"ஹாய்" என்று சொல்லிச் சென்றாள்
தோழமையால் என்றிருந்தேன்
முப்பதில் முகம் பார்த்தால்
'அண்ணா' என்றழைப்பாள்
அன்பினால் என்றிருந்தேன்
நாற்பதில் நானிருக்க
'அங்கிள்' என்றாளே
அதிர்ச்சியில் வாயடைத்தேன்
ஐம்பதில் என்ன சொல்வாள்
'ஐயா' என்றழைப்பாளோ
நான் அவளை
பெயர் சொல்லி அழைத்து வந்தேன்
உறவு வைத்து அழைத்ததில்லை
ஆண்டாண்டு கடந்தாலும்
அவள் வயது
அப்படியே உள்ளதுவாம்
ஆணான எனக்கு மட்டும்
வயதேருவதெப்படியாம்?
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment