சொல்லாடி சொன்னடி சொல்லடி
சொல்லிலடித்தது ஏனடி
என்னையே எண்ணியே சொன்னியா
சொன்னதெல்லாம் உண்மையா
உனக்குள் நான் இனி இல்லையா
உறவை முறிப்பது தன்மையா
வெறுந்தாளாய் பறந்த என்னில்
கவிதை உன்னை எழுதிவைத்தேன்
அன்றோ ரசித்து படித்தவள் நீ
இன்றோ கிழித்து எறிந்தவள் நீ
கவியரங்கே கருத்தரங்கில்
கண்ட குறை என்ன கண்ணே
செந்தமிழே சங்கமத்தில்
சந்திப்பிழை கண்டாயோ
சொந்தமில்லை என்றாயோ
குரல் மொழியில் கீரனாகி
பொருட்குறை கண்டு நீயும்
கருவிழியில் கண்ணகியாய்
பந்தமில்லை என்று சொல்லி
பாண்டிசபையாக்கிச் சென்றாய்
பொறுமை உனக்கில்லையடி
வெறுமை எனை சேர்ந்ததடி
வெந்து நொந்தேன் - சொன்ன நொடி
துர்வாசர் வார்த்தையாலே
துஷ்யந்தனாகி நீயும்
துக்கத்தை தூக்கி தந்தே
சகுந்தலையாய் சாய்த்ததேனோ
மறக்கடி என்ற-அடி சொன்ன நொடி
மனம் கல்லடி-கண்ணாடி ஆனதடி
என் தசையடி
கசையடி தாங்குமடி
உன் வசையடி
விசையடி மாய்க்குதடி
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment