வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
பார்க்கலாம் என்றெண்ணங்கள்
வாழ்வோரைப் பார்க்கவே
பறந்து தான் சென்றன
வெடிச்சிரிப்பு கேட்டது
விழி வெளிவர பார்த்தது
வெற்றிக்கொடி நாட்டிய
சிங்கங்கள் சிரித்தது
வெறுத்து ஒதுங்கியே
வேங்கைகள் எங்கோ பதுங்கின
மீள் குடியேற்றிட
வெளியார் வேண்டிட
அடிக்கல் நாட்டிட
மீண்டும் குழி தோண்டிட
செம்புலம் பெயர்ந்த மண்ணில்
மறைந்த மறவரெல்லாம்
சகதியில் சதையாய் தோன்றிட
சங்கறுத்த நிலையாகிட
சாந்தியை தேடினேன் ஓடினேன்
தாகம் தணித்திட
ஆழ குழிதோண்டி
ஆழ் குழாய் போட்டதில்
அருவியாய் பாய்ந்தது
அத்தனையும் ரத்தம்
அப்படியே நின்றது - என்
நாடிச் சத்தம்
புத்தனை பூஜித்தவரின்
புத்தியும் புரியவில்லை
காந்தியை கற்பித்தவரோ
கற்றபடி நிற்கவில்லை
கொல்லும்படி ஆணை தந்த
கொற்றவனோ அங்கே
குலவி குற்றம் செய்தார்
மற்றவரோ இங்கே
சூழ் நிலையே சூனியமாய்
சுழலக் கண்டேன்
சுற்றி நின்ற சுற்றமெலாம்
சுழன்று விழவும் கண்டேன்
சட்டனவே விழியை திறந்து கொண்டேன்
கனவினின்று நானும் கண் விழித்தேன்
கேட்டதே கனவிலே கோர்வையாக
போர்க்கள காட்சியாக இங்கே
நிஜத்திலே நிற்குமா
எந்தன் ஆவி அங்கே
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment